மருந்து விலை குறைப்பின் பிரதிபலன் மக்களுக்கு கிடைக்க வேண்டுமென சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மருந்து விலை குறைக்கப்பட்டுள்ளமை போன்றே சர்வதேச நிறுவனங்களும் மருந்து உற்பத்திகளின் விலைகளை குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாகவும், இந்த விலை குறைப்பின் காரணமாக ஆண்டொன்றுக்கு 09 பில்லியன் ரூபா பிரதிபலன் நாட்டுக்கு கிடைப்பதாகவும் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் தெரிவித்துள்ளார்.
அத்துடன், சர்வதேச மருந்து உற்பத்தி விலைகள் குறைக்கப்பட்டதன் பிரதிபலன் இலங்கைக்கு மாத்திரம் கிடைப்பது விஷேட அம்சம் என்றும் அமைச்சர் ராஜித சேனாரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.