ஆப்கானிஸ்தான் காபுல் நகரிலுள்ள இந்திய தூதரகம் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலால் இந்திய பணியாளர்கள் எவருக்கும் பாதிப்பு இல்லையென இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் வெளிநாட்டு தூதரகங்கள் அமைந்துள்ள பகுதியில் நேற்று எறிகணை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும், தூதரகத்தின் அருகில் அந்த எறிகணை வீழ்ந்துள்ளதால், தூதரகத்திற்கு பாரிய சேதங்கள் எதுவையும் ஏற்படவில்லையெனத் தெரிவிக்கப்படுகிறது.