தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு எனப்படும் ஏறுதழுவுதல் போட்டிகளில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
காளை அடக்கும் போட்டிகளில் கலந்துகொண்ட மற்றும் பார்வையிட்டவர்களே இவ்வாறு உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நீண்ட போராட்டத்தின் மூலம் கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கு அனுமதி கிடைக்கப்பெற்றது. இதற்கு அமைவாக, இந்த ஆண்டு தடையின்றி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. போட்டிகள் தமிழக அரசாங்கத்தின் அனுசரணையுடனேயே இடம்பெறுவதுடன், வெற்றியாளர்களுக்கு மிகப்பெறுமதியான பரிசில்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.