பிரித்தானியாவின் சிறுவர் பாதுகாப்பு அமைப்பு, ஆப்கானிஸ்தானில் தமது பணிகளை இடைநிறுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தான், ஜலலாபாத்திலுள்ள தமது அலுவலகத்தின் மீது நேற்று தாக்குதல் நடத்தப்பட்டதில் குறித்த அமைப்பின் 03 அதிகாரிகள் உள்ளடங்களாக 04 பேர் பலியாகியதாகவும், ஐ.எஸ். தீவிரவாதிகளே இந்த தாக்குதலை நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் ஆப்கானிஸ்தானில் தமது பணிகளை தற்காலிகமாக இடைநிறுத்திக் கொள்வதாக சிறுவர் பாதுகாப்பு அமைப்பு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.