அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பில் காத்தான்குடி நகரசபைத் தேர்தலுக்காகப் போட்டியிடும் ஊடகவியலாளர் ரீ.எல்.ஜவ்பர்கானின் தேர்தல் காரியாலயம் இன்று அதிகாலை தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
காத்தான்குடி மீராபள்ளி வட்டாரத்தில் அமைந்திருந்த குறித்த அபேட்சகரின் அலுவலகம், இனந்தெரியாதோரால் முற்றாகத் தீக்கிரையாக்கப்பட்டுள்ள நிலையில், இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.