சந்தைக்கு மோட்டார் சைக்கிளில் கத்தரிக்காய் கொண்டுவந்த விவசாயியை மோட்டார் சைக்கிளில் துரத்திவந்த முகமூடி மனிதர்கள் சாலையில் வைத்து தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளனர்.
இச்சம்பவம் இன்று காலை சாவகச்சேரி தனங்கிளப்பு வீதியில் இடம்பெற்றுள்ளது.
முழங்காவிலைச் சேர்ந்த விவசாயி தினமும் தனது தோட்டத்தில் விளைந்த கத்தரிக்காயை சாவகச்சேரி சந்தைக்குக் கொண்டுவந்து கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில், இன்று காலையும் மோட்டார் சைக்கிளில் கத்தரிக்காய் மூடைகளுடன் சந்தைக்கு சென்றுள்ளார். இதன்போது, குறித்த விவசாயியை துரத்திவந்த முகமூடி அணிந்த இருவரும் கொட்டனால் அவரைத் தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்த விவசாயி வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுச் சென்றுள்ளார்.