போதைப்பொருள் கட்டமைப்பை சிதைப்பதன் ஊடாகவே போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த முடியுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
களுத்துறை, கட்டுக்குருந்த பகுதியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதுடன், கடந்த காலங்களில் வன்முறையினால் மக்களின் எதிர்காலம் சீரழிந்ததாகவும், தற்போது போதைப்பொருளினால் அத்தகைய சூழல் உருவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
எனவே, சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அனைத்து தரப்புக்களும் போதைப்பொருளை ஒழிக்க இணைந்து செயற்பட வேண்டும் எனவும் பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார்.