இலங்கை வந்தன இரு நாட்டு அணிகள்

விளையாட்டு

சுதந்திர கிண்ண முக்கோண 20க்கு 20 கிரிக்கெட் போட்டித் தொடரில் பங்கேற்கும் இந்திய மற்றும் பங்களாதேஷ் அணி வீரர்கள் இலங்கையை வந்தடைந்தனர்.

இலங்கையில் இடம்பெறவுள்ள, சுதந்திர கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் மோதவுள்ளன. இதன் முதல் போட்டி நாளை இடம்பெறவுள்ள நிலையில், முதல் போட்டியில் இலங்கை அணி இந்திய அணியை எதிர்கொள்ளவுள்ளது.

இந்திய அணியில் முக்கிய வீரர்களான அணித்தலைவர் விராட் கோலி, விக்கெட் காப்பாளர் மகேந்திரசிங் தோனி, சகலதுறை ஆட்டக்காரர் ஹர்திக் பாண்டியா, வேகப்பந்து வீச்சாளர்கள் பும்ரா, புவனேஸ்வர் குமார் ஆகியோருக்கு இந்த தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், இந்திய அணிக்கு ரோஹித் சர்மா தலைமைத் தாங்குவதுடன், இலங்கை அணியில் அஞ்சலோ மத்தியூஸ் மற்றும் நிரோஷன் திக்வெல்ல ஆகியோர் பங்கெடுக்கமாட்டார்களென அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.