எந்த இனத்தினருக்கும் இடையூறு ஏற்படாத வண்ணம் சகலரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாட்டில் அமைதியான நிலைமையை ஏற்படுத்த அனைத்து இனத்தினரும் பங்களிப்பு செய்ய வேண்டுமென மதத்தலைவர்கள் உடனான கலந்துரையாடலை தொடர்ந்து இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் உரையாற்றும் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.