இலங்கையின் 70ஆவது சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற இரண்டாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அணி வெற்றி பெற்றுள்ளது.
இன்று நடைபெற்ற போட்டியில் இந்தியா – பங்களாதேஷ் அணிகள் மோதிக்கொண்டன. இதில், முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்களை இழந்து 139 ஓட்டங்களை பெற்றது.
140 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி 18.4 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து வெற்றியைத் தனதாக்கிக் கொண்டது.