சமூக வலைத்தளங்களுக்கான தடை நீக்கம்?

செய்திகள் முக்கிய செய்திகள் 1

பேஸ்புக், வைபர், வட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை பெரும்பாலும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (16) முதல் நீக்கப்படுமென டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கண்டி பிரதேசத்தில் ஏற்பட்ட குழப்பநிலையை கருத்திற்கொண்டு, முகப்புத்தகம், வைபர், வட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு பிரவேசிப்பதை இடைநிறுத்துவதற்கு தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு கடந்த 7ஆம் திகதி தீர்மானம் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.