விவசாய அமைச்சின் நவீனமயமாக்கல் செயற்திட்டத்தின் கீழ் ஊவா மாகாணத்தில் 3 இலட்சத்து 75 ஆயிரம் அன்னாசி கன்றுகளை பயிரிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைத்திட்டத்திற்காக சர்வதேச அபிவிருத்திக்கான முகவர் அமைப்பு, நிதியுதவி வழங்கியுள்ள நிலையில், நெற்பயிர் அல்லாத விவசாய உற்பத்தியை நவீன மயப்படுத்தப்படுவதற்கு 07 மாவட்டங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த செயற்திட்டத்தில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மட்டக்களப்பு, அனுராதபுரம், பொலன்னறுவை, பதுளை, மொனராகலை ஆகிய மாவட்டங்கள் உள்ளக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.