சமூக வலைத்தளங்களுக்கு புதிய கட்டுப்பாடு

செய்திகள் முக்கிய செய்திகள் 2

பேஸ்புக் உள்ளிட்ட ஏனைய சமூக வலைத்தளங்கள் அனைத்திற்கும் புதிய கட்டுப்பாட்டு விதிகள் விதிக்கப்படுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு இசிபத்தன கல்லூரியில் இன்று நடைபெற்ற, நீச்சல் தடாகத் திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளதுடன், அடுத்த வாரத்திலிருந்து, பேஸ்புக் உள்ளிட்ட ஏனைய வலைத்தளங்கள் அனைத்தும் புதிய கட்டுப்பாட்டு விதிகளுக்கு அமைவாகவே இயங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.