பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை விரைவில் முன்வைக்க கூட்டு எதிர்க்கட்சியினர் தீர்மானித்துள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வின் தலைமையில் நேற்றிரவு நடைபெற்ற கூட்டத்தில் இந்த விடயம் பற்றி கலந்துரையாடப்பட்டதாக அதன் பின்னரான ஊடகவியலாளர் சந்திப்பின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.