பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவன விவகாரம்: மீள்பரிசீலனை மனு தாக்கல்

செய்திகள் முக்கிய செய்திகள் 2

பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அதன் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மீள்பரிசீலனை மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.

தமக்கு பிணை வழங்குமாறு கோரிக்கை விடுத்து இந்த மீள் பரிசீலனை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அர்ஜுன் எலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோர் எதிர்வரும் 29ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை கூறத்தக்கது.

இந்த மனுவில் பிரதிவாதிகளாக சட்டமா அதிபர் மற்றும் நிதி விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி ஆகியொர் பெயரிடப்பட்டுள்ளதாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் கூறியுள்ளார்.