நாட்டில் நிலவுகின்ற வெப்பமான காலநிலை எதிர்வரும் மாதத்திலும் தொடருமென எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு நேரே சூரியன் உச்சம் பெற்றுள்ள நிலையில், வெப்ப அதிகரிப்பு ஏற்பட்டு, வளிமண்டலத்தில் நீராவியின் அளவு மேலோங்கியுள்ளதால் இந்த சூடான காலநிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.