அரசியல்வாதிகள் இலங்கை கிரிக்கெட் துறை அழிக்கப்படுவதாக, இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.
ஒரு வருடத்திற்குள் மாத்திரம் இலங்கை அணியில் 60 புதிய வீரர்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக இந்தியாவிலிருந்து வெளிவரும் பத்திரிகையொன்றிற்கு வழங்கிய செவ்வியில் முரளிதரன் தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியில் தற்போது குழப்பநிலை ஏற்பட்டுள்ளதுடன், கிரிக்கெட் அரசியல்வாதிகளின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளதாகவும், கிரிக்கெட் தொடர்பில் குறைந்த அறிவு அல்லது அறிவில்லாதவர்களால் கிரிக்கெட் அழிவடைந்து செல்வதாகவும், வீரர்கள் திறமையை வெளிப்படுத்தும் நம்பிக்கையை கட்டியெழுப்புவது அவசியம் என்றும் முரளிதரன் மேலும் தெரிவித்துள்ளார்.