கிளிநொச்சி, பளை, அரசர்கேணிப் பிரதேசத்தில் புலிகளின் நிலக்கீழ் பதுங்குகுழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த காணியின் உரிமையாளர் காணியை சுத்தம் செய்யும் போது சீமெந்தால் கட்டப்பட்ட சுவர் தென்பட்டதையடுத்து சந்தேகம் கொண்டு, அருகில் இருந்த இராணுவ முகாமிற்கு தகவல் வழங்கியுள்ளார். தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு சென்ற இராணுவத்தினர், குறித்த காணியில் இருப்பது புலிகளின் நிலக்கீழ் பதுங்குகுழி என்பதை உறுதி செய்துள்ளனர்.
குறித்த பதுங்குகுழியானது சுமார் 35 அல்லது 45 அடி நிலமட்டத்தில் இருந்து கீழ் செல்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.