மீண்டும் மண்சரிவு அபாயம்?

செய்திகள் முக்கிய செய்திகள் 2

மத்திய மலைநாட்டில் நிலவும் மழையுடனான காலநிலையினால் மண்சரிவு அபாயம் இருப்பதனால் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த 48 மணிநேரத்தில் ஹல்துமுல்ல வீதியின் பல பகுதிகளிலும் ஹப்புத்தளை பேரகல, பதுளை எல்ல - வெல்லவாய வீதிகளிலும் மண்சரிவுகள் மற்றும் பாறை சரிவுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆகவே, இப்பகுதியில் வாழும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்கமாறு வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளதுடன், ஹப்புத்தளை வீதியில் பனிமூட்டம் நிலவுவதால் வாகன போக்குவரத்திற்கும் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.