அரச மரக்கூட்டுத்தாபனத்திற்கு புதிய தலைவராக நியமிக்கப்பட்ட அநுருத்த பொல்கம்பொலவின் நியமனத்தை உடன் அமுலுக்கு வரும்வகையில் இரத்துச் செய்ய ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
2 கோடி ரூபா பணத்தை முற்பணமாக பெறும் போது கைது செய்யப்பட்ட அரச மரக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பி.திசாநாயக்க அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப அநுருத்த பொல்கம்பொல புதிய தலைவராக நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.