காஸா தாக்குதலுக்கு பிரான்ஸ் கண்டனம்

உலகச் செய்திகள்

காஸா வன்முறை தாக்குதலுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மெக்ரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அண்மையில் அறிவித்ததுடன் டெல்அவிவ் நகரிலுள்ள அமெரிக்க தூதரகம், ஜெருசலேமுக்கு மாற்றப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், கிழக்கு ஜெருசலேம் நகரில் கட்டப்பட்டுள்ள அமெரிக்க தூதரகம் நேற்று முன்தினம் திறக்கப்பட்ட போது, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் புதல்வி இவாங்கா ட்ரம்ப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அமெரிக்க தூதரகம் திறப்பதை கண்டித்து காஸா மற்றும் மேற்குக்கரை எல்லையில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அது வன்முறையாக மாறியதால், 55 பேர் வரையில் கொல்லப்பட்ட நிலையில், காஸா வன்முறை தாக்குதலுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மெக்ரான் கடும் கண்டனம் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், காஸா விடயம் தொடர்பில் முக்கிய அதிகாரிகளுடன் அடுத்த சில தினங்களில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.