அரசு கூட்டு பொருளாதார அபிவிருத்தி திட்டம் தொடர்பில் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சிறப்பு பயிற்சியினை வழங்குமாறு தேசிய பொருளாதார சபையின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை வழங்கியுள்ளார்.
அபிவிருத்தி திட்டம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் யோசனைகளை பெற்றுக்கொள்ளும் நோக்குடன் ஜனாதிபதியால் இந்த ஆலோசனை நேற்று வழங்கப்பட்டுள்ளது.