சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம்

செய்திகள் முக்கிய செய்திகள் 1

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று (17) இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளதாகவும், கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மற்றும் கட்சியின் வளர்ச்சிக்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது ஆராயப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தற்போதைய அரசாங்கத்தில் இருந்து விலகிய அந்தக் கட்சியின் 16 உறுப்பினர்களும் கட்சியின் வளர்ச்சிக்காக சில யோசனைகளை முன்வைக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளதுடன், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கத்தில் இருந்து விலக வேண்டுமென இதற்கு முன்னர் மத்திய செயற்குழு கூட்டத்தில் முன்வைத்த யோசனை தொடர்பாகவும் ஆராயப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.