அர்ஜுன் மகேந்திரன் தொடர்பில் இன்ரர்போலின் கருத்து

செய்திகள் முக்கிய செய்திகள் 1

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரன் சிங்கப்பூரில் வசித்து வருவதாக இன்டர்போல் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்டர்போல் பொலிஸாரின் சிங்கப்பூர் கிளை அதிகாரிகள், இலங்கை குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு அறிவித்துள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களம் கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று (24) தெரிவித்துள்ளது.

மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, அர்ஜூன மகேந்திரன் சிங்கப்பூரில் வசித்து வருவதாக சட்ட மா அதிபர் திணைக்கள அதிகாரிகளால் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.