ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றால் மஹிந்த ராஜபக்ஷவிடம் ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ள வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (24) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதுடன், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளரை மிக விரைவில் அந்த பதவியில் இருந்து நீக்குமாறும் தெரிவித்துள்ளார்.