திருகோணமலை, கந்தளாய் குளத்து நீரைப் பயன்படுத்தி, 54,000 ஹெக்டேயர் நிலப்பரப்பில் இம்முறை சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கந்தளாய் நீர்ப்பாசனப் பொறியியலாளர் எம்.டபிள்யூ.ஹேரத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கந்தளாய் குளத்தின் நீரைப் பயன்படுத்தி தம்பலகாமம், முள்ளிப்பொத்தானை, கந்தளாய், வான்எல, கிண்ணியா, ஜயந்திபுர போன்ற பகுதிகளில் இம்முறை வேளாண்மை செய்கை பண்ணப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.