ரயில்வே ஊழியர்கள் தொழிற்சங்கத்தின் ஒரு பகுதியினர், இன்று முதல் 48 மணித்தியாலப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.
ரயில் பொருட்கள் பரிசோதகர்கள் மற்றும் ரயில் பயணச்சீட்டு பரிசோதகர்களே இவ்வாறு பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பளக் கணக்குகள் தொடர்பில் அனுராதபுரத்தில் இடம்பெற்ற பிரச்சினைகள் காரணங்காட்டியே இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.