கைதடியில் கேரள கஞ்சா மீட்பு

செய்திகள் முக்கிய செய்திகள் 1

யாழ். கைதடி பகுதியில் 4 கிலோ கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சாவகச்சேரி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போதே இந்த கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன், குறித்த கஞ்சாவினை கடத்திய சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

புத்தளம் பகுதியைச் சேர்ந்த 28 வயது இளைஞனே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதுடன், குறித்த சந்தேக நபரை சாவகச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.