இலங்கை – தென்கொரிய இடையே புரிந்துணர்வை வலுப்படுத்தத் திட்டம்

செய்திகள் முக்கிய செய்திகள் 2

இலங்கை மற்றும் தென்கொரியாவுக்கு இடையிலான பொருளாதார புரிந்துணர்வை வலுப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கொரிய அரசாங்கத்தின் பிரதிநிதிகளுக்கும், இலங்கை பிரதிநிதிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளதாகவும், பாலம் அமைத்தல் மற்றும் ஆடைத் தயாரிப்பு தொழிற்றுறைக்கு வழங்கப்படும் ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கு இரு நாடுகளும் உடன்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது நடைமுறைப்படுத்தப்படும் பல திட்டங்கள் மற்றும் வர்த்தக முதலீடுகள், விவசாயம், கடற்தொழில், விஞ்ஞானம், தொழில்நுட்பம், கலாசாரம் மற்றும் சுற்றுலாத்துறை ஆகியன தொடர்பான புரிந்துணர்வு வேலைத் திட்டங்கள் குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.