அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அபராத அதிகரிப்பில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படாத பட்சத்தில் எதிர்வரும் காலத்தில் பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்படும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
அகில இலங்கை தனியார் பேருந்து பேருந்து சம்மேளனத்தின் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் இதனை தெரிவித்துள்ளார்.
பழைய அபராத அறவீடுகளை பின்பற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.