சிவனொளிபாதமலையில் அமைக்கப்பட்டிருந்த பெயர்ப்பலகையில் பெயர் மாற்றப்பட்டமை தொடர்பில் அமைச்சர் மனோகணேசன் நுவரெலியா மாவட்ட செயலாளரிடம் அறிக்கை கோரியுள்ளார்.
அமைச்சர் நேற்றைய தினம் இதற்கான பணிப்பரையை விடுத்துள்ளார்.
அத்துடன், ஏற்கனவே குறித்த இடத்தில் நிறுவப்பட்டிருந்த பெயர்பலகையில் இருந்ததை போன்று, பெயர் பொறிக்கப்பட்ட பெயர்ப்பலகையை நிறுவுமாறும் அமைச்சர் மனோ கணேசன் பணித்துள்ளார்.