புதிய அரசியல் யாப்பு தொடர்பான வரைவினை எதிர்வரும் நொவம்பர் மாதம் 7ம் திகதி அரசியலமைப்பு பேரவையில் முன்வைக்க வழிநடத்தல் குழு தீர்மானித்துள்ளது.
அரசியல் யாப்பு வழிநடத்தல் குழுவின் கூட்டம் நேற்று பிரதமர் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது குறித்த குழுவினால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவின் அறிக்கை பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டது.
இதன்படி குறித்த வரைவினை எதிர்வரும் நொவம்பர் 7ம் திகதி அரசியலமைப்பு பேரவையில் முன்வைத்து, நாடாளுமன்றில் சமர்ப்பிக்க முடிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.