வரிச்சுமை அதிகரிப்பால் வாழ்க்கை சுமை அதிகரிப்பு- டக்கிளஸ் தேவானந்தா

சிறப்புச் செய்திகள் முக்கிய செய்திகள் 1

நேற்று இடம் பெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் டக்கிளஸ் தேவானந்த வரிச்சுமையினையும் அது உள்ளிட்ட விடையங்களையும் குறிப்பிட்டு இருந்தார்.

இன்று இந்த நாட்டில் ஒரு பொருளின் உற்பத்தி தொடக்கம் அந்தப் பொருளினை நுகர்கின்ற வரையிலும் ஒவ்வொரு நகர்வுகளுக்கும் என வரிகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

இது இந்த ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் பெரிதும் பாதித்து வருகின்றது. இந்த விடயம் தொடர்பில் எவரும் அவதானம் செலுத்துவதாக இல்லை.

பொருட்களுக்கான வரி அறவீடுகள், பொருட்களின் விலையேற்றங்கள் என்பன நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், இந்த நிலை எப்போதாவது மாறி,

எமது மக்களுக்கு சுமையற்ற ஒரு வாழ்க்கையினை வாழக்கூடிய சந்தர்ப்பம் கிட்டும் என எமது மக்களால் நம்ப முடியாத அளவிற்கு இன்று இந்த நாட்டின் நிலை மாறிவிட்டுள்ளது.

இன்றுதான் இப்படி, நாளை இந்த நிலை மாறும் என்பதற்கு வெறும் வார்த்தைகளால் சமாளிப்புகளை வழங்குவதைத் தவிர, நாளை இந்த நிலை மாறும் என்பதற்கு உங்களிடமும் எவ்விதமான நடைமுறை சாத்தியமான திட்டங்களும். இல்லை.

இவ்வளவு காலமாக அறவிட்டுக் கொண்டிரு;கின்ற வரிகளைவிட, வேறு எந்தெந்த வழிகளில் வரிகளை அறவிட முடியும் என்பதையே சதா ஆராய்ந்து பார்த்துக் கொண்டு, அதற்கேற்ப வரிகளை அறவிட்டுக் கொள்வதற்கான சட்டமூலங்களைக் கொண்டு வருகின்றீர்கள்.

மேலும் அவர் உரையாற்றுகையில் இன்று அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் வீழ்ச்சியானது 175 ரூபாவை எட்டிவிட்டிருக்கின்றது. பெறுமதி குறைந்த காகித நோட்டுக்களை அதிகளவில் அச்சிட்டு, இல்லாததொரு பொருளாதார அபிவிருத்தியைக் காட்டிக் கொண்டு,

நாட்டின் அந்நியச் செலாவணியானது தேவையற்ற வகைகளில் வீண்விரயமாக்கப்பட்டதன் - படுவதன் விளைவினையே நாமிந்த ரூபாவின் வீழ்ச்சியில் காண்கின்றோம்.

இந்த நிலைக்கு ஒப்பான நிலைமையே வடக்கிலும் காணப்படுகின்றது.இதற்கான சரியான ஒழுங்கு முறையினை கையாழுமாறும் வலியுறுத்தி இருந்தார்.