பலாலியில் மீள்குடியேற்றம் தொடர்பில் கலந்துரையாட முடிவு

செய்திகள் முக்கிய செய்திகள் 2

மீள்குடியேற்றம் செய்யப்படாத பலாலி ஆரோக்கிய மாதா ஆலயத்தின் பூசை வழிபாட்டிற்காக அப்பகுதி மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொள்ளவுள்ளதாக பங்கு நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.

கடந்த 1990ஆம் ஆண்டு யுத்தம் காரணமாக இடமபெயர்ந்து பல்வேறு பகுதிகளில் வாழும், பலாலி ஆரோக்கிய மாதா ஆலய பங்கு மக்கள் வருடாந்தம் ஆலயத்திற்கு சென்று பூசை வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த ஆலயத்தின் பூசை வழிபாட்டிற்காக நாளை ஞாயிற்றுக்கிழமை (26) அப்பகுதி மக்கள் செல்லவுள்ள நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா மற்றும் எம்.சுமந்திரன் உட்பட, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் செல்லவுள்ளதுடன், மீள்குடியேற்றம் செய்யப்படாத பகுதிகளில் மக்களை மீள்குடியேற்றம் செய்வதற்கான கலந்துரையாடல் ஒன்றினையும் இராணுவத்தினருடன் மேற்கொள்ளவுள்ளதாகவும், பலாலி ஆரோக்கிய மாதா ஆலய பங்கு நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.