கல்லடியில் ஆணின் சடலம் மீட்பு!

செய்திகள் முக்கிய செய்திகள் 3

மட்டக்களப்பு, கல்லடி கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது.

திருச்செந்தூர் பகுதியிலுள்ள கடற்கரையிலேயே கரையொதுங்கிய நிலையில் பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் இந்த சடலம் மீட்கப்பட்டதாகத் தெரிவித்த காத்தான்குடி பொலிஸார், மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளனர். அத்துடன், குறித்த சடலம் சுமார் 35 - 40 வயது மதிக்கத்தக்க ஆணொருவருடையது எனவும் தெரிவித்துள்ளனர்.