குளவிக்கொட்டில் தோட்டத் தொழிலாளர்கள் பாதிப்பு

செய்திகள்

பொகவந்தலாவை தேயிலைத் தோட்டம் ஒன்றில் இடம்பெற்ற குளவிக் கொட்டில் 32 தொழிலாளர்கள் பாதிக்கப்பட்ட நிலையில், பொகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இவர்களில் 18 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதுடன், 14 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.