டெங்கு நோயாளர்களின் பதிவில் வீழ்ச்சி

செய்திகள்

மருத்துவமனைகளில் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் சிறப்பு மருத்துவர் ப்ரசிலா சமரவீர தெரிவித்துள்ளார்.

கடந்த சில வாரங்களுடன் ஒப்பிடும்போது தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தால் குறைவடைந்துள்ளதாகவும், தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் டெங்கு ஒழிப்பு செயற்திட்டமே இதற்கான காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதி வரை டெங்கு நோய் தொற்று காரணமாக ஒரு லட்சத்து 19 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.