கைதானார் விஜய் மல்லையா

இந்தியச் செய்திகள்
இந்திய வங்கிகளின் கடன்களைத் திரும்ப செலுத்தாமல், லண்டனில் பதுங்கியிருந்த விஜய் மல்லையா ஸ்கொட்லாந்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விஜய் மல்லையா, இந்தியாவிலுள்ள பல வங்கிகளில் 9,000 கோடி கடன் பெற்றதனால் அதைத் திருப்பி செலுத்தவில்லை என்பதால், அவர் மீது வழக்கு தொடரப்பட்ட நிலையில், கைது நடவடிக்கைகளில் இருந்து தப்புவதற்காக அவர் லண்டன் தப்பி சென்றிருந்தார்.
எனவே, அவரை கைது செய்து இந்தியாவிற்கு கொண்டுவர மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்ததுடன், ஸ்கார்ட்லாந்து யார்டு பொலிஸாhரின் உதவியை நாடியது.
இந்நிலையில், இன்றைய தினம் அவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், விரைவில் அவர் இந்தியாவிற்கு கொண்டு வரப்படுவாரெனத் தெரிவிக்கப்படுகின்றது.