உறவுகளைத்தேடி தொடரும் போராட்டம்!

முக்கிய செய்திகள் 3

 

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் இன்று 28ஆவது நாளாகவும் தொடர்கின்றது.

தமக்கான உரிய தீர்வினை வழங்கக்கோரி, வவுனியா மத்திய தபால் அலுவலகத்திற்கு அருகே இன்று (23) தமது சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

கையளிக்கப்பட்ட தமது உறவினர்களை விடுவிக்கக்கோரியும், அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரியும், அவசரகாலச் சட்டத்தினை நீக்குமாறும் கோரியே, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.