அனைவரும் வீட்டின் உரிமையாளராகலாம் – ஜனாதிபதி

செய்திகள் முக்கிய செய்திகள் 1

தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்திற்குள் நாட்டின் அனைத்துப் பிரஜைகளையும் வீடொன்றின் உரிமையாளராக்குவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாடு பூராகவும் 454 கிராமங்களை உருவாக்கும் வேலைத் திட்டம் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக திம்புலாகல, மீவத்புர "சந்தரெஸ்கம" கிராமத்தை மக்கள் மயப்படுத்தும் நிகழ்வில் பங்கேற்றிருந்த போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டியுள்ளார்.