தேர்தலை நடாத்துவதற்கு சட்டமூலம் மாற்றமடையவில்லை – மஹிந்த தேசப்பிரிய

செய்திகள் முக்கிய செய்திகள் 1

விருப்பு வாக்கு முறையில் தேர்தலை நடத்தி தொகுதி முறையில் தேர்தலை நடத்துவதற்கு சட்டமூலம் மாற்றமடையவில்லையென தேர்தல்கள் ஆணையகத்தின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தல் முறை தொடர்பில் தேர்தல் ஆணையகத்தின் நிலைப்பாடு மற்றும் தலைவரின் சுயாதீனத் தன்மை தொடர்பில் பிரச்சினை நிலவுவதாக அமைச்சர் டிலான் பெரேரா ஜாஎலயில் இடம்பெற்ற நிகழ்வில் தெரிவித்துள்ளதுடன், நாம் பாராளுமன்றத்தினுள் 19ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு கையுயர்த்தும் தருணத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் தமது உறுதியை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

20ஆவது திருத்தத்தின் படி அடுத்த பாராளுமன்ற தேர்தல் நடத்தப்படமாட்டாது என்ற போதிலும், விருப்பு வாக்கு முறைக்கு தேர்தல்கள் ஆணையகத்தின் தலைவர் அன்பு காட்டுகிறார் போலவே தெரிகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

அவர் சிறந்த தேர்தல் ஆணையாளராக இருந்தார். ஆனால், இந்த தருணத்தில் அரச சார்பற்ற அமைப்பைச் சேர்ந்தவர் போல செயற்படுவதாகவும் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.