தேங்காய் விற்பனையின் போது விலையினை காட்சிப்படுத்தாத விற்பனையாளர்களுக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகார சபையுடன் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக தேங்காய் சாகுபடி வாரியம் தெரிவித்துள்ளது.
அநேகமான பிரதேசங்களில் இவ்வாறு விலை காட்சிப்படுத்தப்படாமல் தேங்காய் விற்பனை செய்யப்படுவதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக வாரியத்தின் தலைவர் கபில யகன்தாவல தெரிவித்துள்ளார்.