அரசியல் கைதிகள் என்றொரு பிரிவில்லை – நீதியமைச்சர்

செய்திகள் முக்கிய செய்திகள் 1

அரசியல் கைதிகள் என்றொரு பிரிவினர் நாட்டில் இல்லையென நீதியமைச்சர் தலதா அத்துக்கோரள தெரிவித்துள்ளார்.

நீதியமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், அரசியல் கைதிகளின் விவகாரம் தொடர்பில் அமைச்சு எடுத்துள்ள நடவடிக்கை என்னவென ஊடகவியலாளர் கேள்வியெழுப்பிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன், கைதிகளை பறிமாற்றிக்கொள்வது தொடர்பில், உலகில் பல்வேறான நாடுகளுடன் நீதியமைச்சு ஒப்பந்தங்களை செய்துகொண்டுள்ளதாகவும், இன்னும் சில நாடுகளுடன் விரைவில் ஒப்பந்தங்களை மேற்கொள்ளவுள்ளதாகவும், நாட்டில் மட்டுமல்ல, உலகிலுள்ள நாடுகளில் எல்லாம் கைதிகள் இருக்கின்ற போதிலும், அரசியல் கைதிகள் என்றொரு பிரிவினர் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.