விவசாயத்துறையில் மாற்றங்களை ஏற்படுத்தி வெற்றிகொள்ளும் நோக்கில் எதிர்காலத்தில் 03 போக பயிர்ச் செய்கைகளை ஊக்குவிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நாடு எதிர்கொள்ளும் உணவு உற்பத்தி பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தேசிய உணவு உற்பத்தி வாரம் அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன், இது தொடர்பில், தெளிவூட்டும் நிகழ்வொன்று நேற்று கொழும்பில் இடம்பெற்ற போது, அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.