சோமாலியாவில் குண்டுத் தாக்குதல்; 230 பேர் பலி

உலகச் செய்திகள்

சோமாலியா நாட்டின் தலைநகர் மொகதிசுவில் லொறி ஒன்றில் கொண்டு வந்த வெடிகுண்டுகளை பயங்கரவாதிகள் வெடிக்க செய்துள்ள சம்பவத்தில் பொதுமக்களில் 230 பேர் பலியாகியுள்ளதுடன், அதிகளவானோர் காயமடைந்துள்ளதாக சர்வதேசச் செய்திகள் தெரிவிக்கின்றன.

அந்நாட்டின் முக்கிய அமைச்சகங்கள் அமைந்துள்ள பரபரப்பு நிறைந்த சாலைகளை இலக்காக கொண்டு நேற்று இந்த தாக்குதல் நடந்தப்பட்டுள்ள போதிலும், பெருமளவில் பொதுமக்களே பலியாகியுள்ளனர், காயமடைந்து மருத்துவமனைகளில் பலர் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடுமெனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அதிபர் அப்துல்லாஹி முகமது 03 நாட்கள் இரங்கல் அனுசரிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.