வறுமையை இல்லாதொழிக்கும் “கிராம சக்தி” தேசிய வேலைத்திட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று பிற்பகல் கொழும்பு சுகததாஸ அரங்கில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் நிலையான அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு எதிர்வரும் 2030ஆம் ஆண்டளவில் வறுமையற்ற இலங்கையை கட்டியெழுப்பும் நோக்கில் இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.