யாழ் போதனா வைத்தியசாலையில் இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டோரின் 30 ஆண்டு நினைவு தினம் இன்று (21) அனுஷ்டிக்கப்பட்டது.
யாழ். போதனா வைத்தியசாலையில் கடமையின் போது 1987ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21ஆம், 22ஆம் திகதிகளில் வைத்தியசாலை வளாகத்துக்குள் நுழைந்த இந்திய படையினரால் 21 உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் சுட்டுப்படுகொலை செய்ய்பட்டனர்.
சுட்டுக்கொலை செய்யப்பட்டவர்களின் 30ஆவது ஆண்டு நினைவுநாள் நிகழ்வு இன்று காலை 10.00 மணியளவில் அகவணக்கத்துடன் ஆரம்பமானது. நிகழ்வில் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி பொது ஈகைச் சுடரினை ஏற்றியும் உயிழந்தவர்களின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்தும் அஞ்சலி செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, உயிரிழந்தோரின் உறவினர்களினால் மலர்அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், நினைவுரைகளும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் படுகொலை செய்யப்பட்டோரின் உறவினர்கள் தாதிய உத்தியோகத்தார்கள், ஊழியர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.