300 கோடி ரூபா நிதி மோசடி; இலஞ்ச ஊழல் மோசடி ஆணைக்குழு செல்லத் தயார்

செய்திகள் முக்கிய செய்திகள் 2

முன்னாள் வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட 300 கோடி ரூபா நிதிமோசடி தொடர்பில், இலஞ்ச ஊழல் மோசடி ஆணைக்குழுவிற்கு செல்ல தாம் தயாரென அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

தங்காலை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளதுடன், கடந்த 2014ஆம் ஆண்டு வழங்கப்பட்ட அமைச்சரவை அனுமதிக்கு அமைய, இரண்டரை இலட்சம் மெட்ரிக் டொன் அரிசி கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. புறக்கோட்டையில் விற்பனை செய்யப்படும் அரிசியின் தொகை விலையிலும் பார்க்க 9 ரூபாய் அதிக விலையில் இந்த அரிசி கொள்வனவு செய்யப்பட்டதன் மூலம், 300 கோடிக்கும் அதிகமான நிதி மோசடியொன்று இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பிலான விசாரணை அறிக்கையை கோப்குழு சமர்ப்பித்துள்ள நிலையில், விசாரணைகள் இன்னும் விரைவுபடுத்தப்பட வேண்டும் என்பதால், இது தொடர்பில் தாம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு செல்ல தயாராகி வருவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.