அரசியல் கைதிகளுக்காக கையெழுத்துப் போராட்டம்

சிறப்புச் செய்திகள் செய்திகள்

அநுராதபுரத்தில் உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றி, அவர்களை விடுவிக்க வேண்டுமென வலியுறுத்தி யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் கையெழுத்துப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், யாழ். பல்கலைக்கழகத்தில் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ள இக்கையெழுத்துப் போராட்டம் வடமாகாணம் முழுவதும் மாணவர்களால் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், யாழ்ப்பாணத்தின் பல்வேறு இடங்களிலும் மாணவர்களால் கையெழுத்துகள் நேற்றுப் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேபோன்று கிழக்கு மாகாணத்திலும் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக மாணவர்களால் இக்கையெழுத்துப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்துள்ள இப்போராட்டத்துக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வேண்டியுள்ளது.

இவ்வாறு பெறப்படும் கையெழுத்துக்களை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் அனுப்பி வைக்கவுள்ளதாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் கிருஷ்ணமேனன் தெரிவித்துள்ளார்.