கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவின் இயக்கச்சி பகுதியில் வைத்து கேரள கஞ்சாவுடன் பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று மாலை வெற்றிலைக்கேணி பகுதியிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட கஞ்சா பொதியுடன் திருகோணமலைக்கு செல்லவிருந்த நிலையிலேயே, குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடமிருந்;த 4.70 கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்டுள்ள பெண் 32 வயதுடையவர் எனவும், மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.